Thursday, September 18, 2025

கசப்பாயினும் உண்மைகள், எனது குறும் பதிவுகள் சில!

# முகநூலில் கடந்த சில நாட்களாக நானிட்ட வர்ணக் குறும்பதிவுகள் !

நீங்கள் விரும்பிய ஒரு பதிவின் கீழ் உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதுங்கள்!

  1. இந்த சமூகத்திலும் தேசத்திலும் தலைமைகள் இல்லை என்பதனை விட பிழையானவர்கள் அவற்றை ஆக்கிரமித்துள்ளனர் என்பதே உண்மை!
  2. சமூகம் செலுத்தியுள்ள விலைக்கு பன்மடங்காக பிரதிபலனை பெற உணர்ச்சி வசங்களுக்கப்பால் அறிவுபூர்வமாக ஆன்மீக ஒளியில் நாம் சிந்திப்போம்.
  3. அரசியல் நிழச்சி நிரலோடு பெருந்தேசியவாத பொருளாதார நிகழ்ச்சி நிரல் முழு வீச்சில்! மொத்த சில்லறை மற்றும் சீசன் வியாபாரம் இலக்கு!
  4. சில பிரபலங்களின் நிறுவன ரீதியிலான அரசியல் அரசியல் வாதிகளின் அரசியலை விட அபத்தமானதாக, ஆபத்தானதாக இருக்கிறது.
  5. பிரபுக்களையும் பிரபலங்களையும் இனியும் நம்பியிராது ஊர்மட்ட மாவட்ட மட்ட “ஷூரா” கட்டமைப்புக்களை இன்றே ஏற்படுத்தி அதன் வழிநடப்போம்!
  6. தேசிய,பல்தேசிய, பிராந்திய அரசியல் பொருளாதார இராணுவ மூலோபாய நகர்வுகளிற்காக உம்மத்து பலிக்கடாவாக்கப் படுகிறது!
  7. சர்வதேச சமூகத்தையோ முஸ்லிம் உலகத்தையோ இலங்கை முஸ்லிம்கள் நம்பியிருக்க முடியாது, தீர்வு அல்லாஹ்விற்குப்பின் எங்களிடமே இருக்கிறது.
  8. நீங்கள் முன்வைக்கும் எதிர்பார்க்கும் ஒரு பணியை களத்தில் அமுலாக்கும் ஒரு சில சகோதரர்களுக்கு ஆதரவு தாருங்கள், அவர்களும் வாழணும்!
  9. எனது நண்பர்கள் பார்வையாளர்களாக அன்றி அறப்பணிகளில் பங்காளர்களாக இருப்பதனையே விரும்புகிறேன், இந்த நல்லுறவு இன்மையில் நிறைவு பெறுவதல்ல. இன்ஷா அல்லாஹ்.
  10. பேரின அரசியலின் ஆழ அகலங்களை புதிய தலைமுறையினர் புரிந்து கொள்தல் கட்டாயமாகும்! “இராஜதந்திரம்” நாம் இழந்து தவிக்கும் ஒர் ஆயுதம்.
  11. முடியுமானவற்றை (10 தனித்தனியாகவும் குழுக்களாகவும் போட்டி போட்டு செய்யும் நாம் செய்ய வேண்டியவற்றை (90%) மறந்து விடுகிறோம்!
  12. தோள்மேல் கரம் போட்டு முதிர்சியின்மையால் முதுகில் குத்தும் உனை உன் பணிகள் கருதி முதுகில் தட்டிக் கொடுப்பதில் ஆனந்தம் தோழா.
  13. தேசிய வாழ்விலும் சமூக வாழ்விலும் நிராகரிக்கப்பட வேண்டியவர்களே நாட்டை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளனர்; அரசியலில் மட்டுமல்ல.
  14. மனித குலத்தின் விமோசனத்திற்கான கருணைத் தூதை முன்வைப்பதில் நாம் தவறிழைத்து விட்டோம், இனியும் காலம் கடத்த முடியாது!
  15. மனித குலத்திற்கான மகத்தான தூதை யுகத்திற்கான பரிபாஷைகளில் அனைவருக்கும் சொல்வதில் தான் நிலையான அமைதி சமாதானம் இருக்கிறது.
  16. எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாமல் போட்டி பொறாமையில் அழிகிறோம், அரசியலில் மட்டுமல்ல!
  17. பதிவுகள் பகிர்வுகள் ஆபத்தில் தள்ளி விடலாம்! நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக சகோதரிகளை அறிவுறுத்துங்கள்.
  18. அமானிதங்களை பாழ் படுத்துவோரை குறை கூறிக் கொண்டு மாத்திரம் காலத்தை கடத்தாது தனித்தும் சேர்ந்தும் நாம் செய்ய வேண்டியவற்றை செய்வோம்!
  19. நாம் கடத்துகின்ற ஒவ்வொரு நொடியும் தீர்க்கமானவை, சம்பவங்களோடு வாழும் நாம் சரித்திரங்களை மறந்து போகிறோம்! உஷார் மடையர்கள்.
  20. ஒரு சிலரின் அதிகாரப் போட்டிக்கு நம் சமூகம் பலிக்கடா ஆகிறது, இவ்வாறே விட்டு விட்டால் வரும் சந்ததிகள் எம்மை சபிக்கும்.
  21. நிவாரணம் பெறுவோரை படம்பிடித்து சமூக ஊடகங்களில் போட்டு அசெளகரியப்படுத்தாது அல்லாஹ்விற்காக அறப் பணிகள் செய்வோம்.
  22. குறைகளை மாத்திரம் கண்டு நிறைகளை காண மறுக்கும் அல்லது தவறிவிடும் பலர் எதுவுமே ஆக்கபூர்வமாக செய்ய முன்வருவதுமில்லை.
  23. ஆலோசனைகளை விட அர்ப்பணிப்புகளே அதிகம் தேவை, தன்னார்வளர்கள் முன்வரவும்.
  24. கலவரங்களிற்கு பின்னரான நிவாரண உதவிகள், தரவு திரட்டல், சட்ட உதவிகள் என்பவற்றை ஒருங்கிணைப்பதில் ஊர்மட்ட ஷுராக்கள் வகிபாகம் அவசியம்.
  25. கிராம சேவகர்களூடாக மாவட்ட செயலகங்கள் திரட்டும் உத்தியோக பூர்வ தகவல்கள், தரவுகள் சேதவிபரங்களே அரச இழப்பீடுகள் பெற அவசியம்.
  26. தேசிய ஷுரா சபையின் ஆரவாரங்களற்ற பணிகளில் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக இணைந்து செயற்பட முன் வாருங்கள்.
  27. நாம் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்,எங்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலும் கிடையாது!
  28. எமது தேசிய வாழ்வில் எங்கே கோளாறு இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து நாமாக எம்மை மாற்றிக் கொள்ளாதவரை எதிர்காலமும் கேள்விக் குறியே!
  29. கூலிப்படை காடையர்களின் பின்னால் உள்ள அரசியல் சதிகாரர்களது நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும் நாம் அவதானமாக இருக்க வேண்டும்!
  30. அரசியலுக்காகவும் ஆக்கிரமிப்புகளுக்காகவும் இனம் மதம் மொழி என பேதமைகள் போஷிக்கப்பட்டு அழிவுகள் அரங்கேற்றப்படுகின்றன!
  31. நவீன இஸ்லாமிய சிந்தனைகளும் சிந்தனைப் பள்ளிகளும் அறிஞர்களும் கல்விமான்களும் இன்னும் சிவில் சமூகப் படவில்லை என்பதனை உணருகிறோம்!
  32. அன்று வாரத்தைகளால் வசனங்களால் சாதித்தவைகளை இன்று உரைகளாலும் நூல்களாலும் சாதிக்க முடியவில்லை!
  33. யார்யாரோ படைத்த வரலாறுகளை புரட்டிப் புரட்டிப் படிக்கும் எம்மால் சொந்த வரலாற்றைப் படைக்க ஒரு எட்டைக் கூட முன்வைக்க முடியவில்லை!
  34. அழகிய எளிய அன்றாட இஸ்லாமிய வாழ்வு நெறியை வித விதமான வியாக்கியானங்களால் வித்துவான்கள் சிக்கலான சர்சைகளாக்கி விடுகின்றனர்!
  35. எமது குறுகிய எண்ணம் கொண்ட அரசியல் பொருளாதார சமய கலாசார சீர்கேடுகளும் ஐக்கியமின்மையும் எதிரிகளை நன்கு போஷிக்கின்றன!
  36. உம்மத்தில் உள்ள ஓரிரு தீயவர்கள் ஒட்டு மொத்த உம்மத்திற்கும் அழிவை, இழிவை தேடித்தருவார்கள், இஸ்லாம் இதை சொல்லித் தந்திருக்கிறது!
  37. யார் யாரோ அனுப்பும் வாட்ஸ்அப் களால் வழிநடத்தப் படும் நாதியற்ற சமூகமாக நாம் மாறிக் கொண்டிருக்கின்றோம்.
  38. ஒரு இனத்தின் மீதான அடாவடி தேசத் துரோகமாகும். சட்டமா அதிபர் திணைக்களம் அரச சட்டத்தரணிகள்   விவகாரத்தை கையாள பணிக்கப் படல் வேண்டும்!
  39. கையாலாகா மூன்று தசாப்த முஸ்லிம் அரசியலின் பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்!
  40. இருப்பதையும் இழக்கின்ற நிலையில் சமூகம், தலைவர் யாரெனும் சர்சையில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் அரசியல் சூதாட்டம், அரசியல் தலைமைத்துவமின்றி சமூகம் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எனும் நிர்க்கதி நிலையில்.
  41. பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள், அபிஷேகம் செய்ய அபிமானிகள் இருக்கும் வரை ஷைத்தான்களின் சாம்ராஜ்யங்கள் சரிவதுமில்லை.
  42. அராஜகம் கோலோச்சுமெனில் அறப்பணிக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன, சவால்களிற்குப் பின்னால் உள்ள சந்தர்ப்பங்களைத் தேடுங்கள்!
  43. சத்தியம் (الحق) செத்துப் போவதில்லை! அதன் காவலர்கள் சளைத்து விடுவதுமில்லை!
  44. பல்வேறு பின்புலங்களுடன் நிகழ்ச்சி நிரல்களுடன் சமூகத்தை பல தளங்களிலும் பிரதிநிதித்துவம் செய்வோர் குறித்து அவதானம் தேவை!
  45. ஒரு காட்டை எரித்துவிட ஒரு தீக்குச்சி போதும், அணைப்பதற்குத் தான் ஆற்று வெள்ளம் தேவை! வீரமும் அர்பணிப்பும் தீயணைப்பதற்கே தேவை!
  46. “ஷுரா” என்பது “நான்” “நீ” என்றிலா “நானும் நீயும்” “நாம்” ஆக ஒருமிக்கும் உண்மையான மக்கள் நியாயாதிக்க தலைமைத்துவமாகும்.
  47. Minolta DSC

    வருமுன் காக்க அடிமட்ட தலைமைகள் அவசியம், வந்தபின் பார்க்கமட்டுமே தேசியமட்ட தலைமைகளால் முடியும். ஊர்மட்ட ஷுராக்கள் அவசியம்.

  48. சமூகத் தலைமை என்பது (ஷூரா) கூட்டுப் பொறுப்பாகும். என்னால்,எம்மால் மாத்திரமே முடியும் என்று தனி நபர்களோ குழுக்களோ கோருவது தப்பு!
  49. “எம்மால் முடியும்” என்போரை வரவேற்கும் அதேவேளை, “எம்மால் மட்டுமே முடியும்” என மார் தட்டுவோரை நெறிப்படுத்துதலும் கடமையாகும்.
  50. தனிப்பட்ட தகராருகளால் கலவரங்கள் ஏற்படவில்லை, கலவரங்களிற்காக திட்டமிடப்பட்ட தகராருகள் உருவாக்கப்பட்டன. இரட்டிப்பு அவதானம் தேவை!
  51. மேலதிக பேணுதலிற்காக அறிமுகப் படுத்தப் பட்ட சில விதிகள் அதனை விடவும் பாரதூரமான தற்காப்பு நியாயங்கள் கருதி கைவிடப்படலாம்!
  52. புறக் கோலங்களில் (தலை) வீங்கிப் போன ஒரு சமூகம்! உஷார் மடமைகளின் உச்சக் கட்டத்தில், எதிர் வினைகளால் நகர்த்தப் படுகிறது.
  53. அரபுக் கல்லூரிகளுக்கு கலைத்துறையில் மாத்திரம் கற்க மாணவர்கள் உள்வாங்கப் படுவது குறித்து மீள்பரிசீலனை வேண்டும்!
  54. அஹதிய்யா அறபு மதரஸா மாணவர்கள் மற்றும் ஆலிம்கள் தேசிய உடைக்கு நிகரான அரை ஜுப்பா சீருடையை மீள அறிமுகம் செய்தல் காலோசிதமானது.
  55. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான இறுதிச் சமரே உலகெங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அடக்குமுறை!
  56. ஏப்ரல் விடுமுறையை முஸ்லிம்கள் எவ்வாறு கழிக்கின்றார்கள் என்பதை வைத்தே சமூக எதிர் காலம் குறித்த சில மதிப்பீடுகளை செய்து கொள்ளலாம்.
  57. தொடரும் இன்ஷா அல்லாஹ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles